பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் சகோதரர் மனோகர் சிங். இவர் கடந்தாண்டு அரசு மருத்துவமனை அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். இத்தேர்தலில் பாசிபதானா தொகுதியில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த தொகுதி தற்போது எம்எல்ஏ.வாக உள்ள குர்பிரீத் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்துள்ள மனோகர் சிங், இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.