நெல்லை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார்(கிழக்கு), சுரேஷ்குமார்(மேற்கு) ஆகியோர் உத்தரவுப்படி, பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி உதவி கமிஷனர்கள் முறையே பாளை பாலச்சந்திரன், டவுன் விஜயகுமார், நெல்லை சந்திப்பு அண்ணாத்துரை, மேலப்பாளையம் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் மாநகர பகுதிகளில் உள்ள 8 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.