சென்னை: தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 1.64 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாததற்காக 1910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.