×

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.7 லட்சத்தை தாண்டியது; தற்போது சிகிச்சையில் 15.50 லட்சம் பேர்: சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.7 லட்சத்தை தாண்டியது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.86 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.71 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,71,202 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,71,22,614 ஆக உயர்ந்தது.

* புதிதாக 314 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,86,066 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,38,331 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,50,85,721 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,50,377 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.51% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.31% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.18% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் 1,56,76,15,454 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 66,21,395 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India ,Health Department , The one-day corona impact in India exceeds 2.7 lakh; 15.50 lakh people currently in treatment: Health Department announcement
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...