சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் கூறுகையில், ‘யோகி ஆதித்யநாத் மதுரா, பிரயாக்ராஜ் அல்லது அயோத்தியில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. எனவே, கோரக்பூரிலேயே அவர் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். அவர் மீண்டும் லக்னோவுக்கு (தலைநகர்) வரத் தேவையில்லை. அவரை ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்’ என கிண்டலாக தெரிவித்தார். அவர் மேலும், ‘பாஜ.வில் இருந்து விலகும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் யாரையும் இனி கட்சியில் சேர்க்க மாட்டோம்.