ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பியாச்சு யோகியை கிண்டலடித்த அகிலேஷ்

சமாஜ்வாடி  தலைவர் அகிலேஷ் கூறுகையில், ‘யோகி ஆதித்யநாத் மதுரா, பிரயாக்ராஜ் அல்லது அயோத்தியில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. எனவே, கோரக்பூரிலேயே அவர் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.  அவர் மீண்டும் லக்னோவுக்கு (தலைநகர்) வரத் தேவையில்லை. அவரை ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்’ என கிண்டலாக தெரிவித்தார். அவர் மேலும், ‘பாஜ.வில் இருந்து விலகும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் யாரையும் இனி கட்சியில் சேர்க்க மாட்டோம்.

 ஏனென்றால், பாஜ.வில் இருந்து வருபவர்களால் கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்,’ என்றும் சிரித்தபடி அவர் கூறினார். பாஜ.வில் இருந்து சமீபத்தில் 3 அமைச்சர்கள் உட்பட 9 எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடியில்  சேர்ந்துள்ளனர். சமாஜ்வாடியில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் அளவுக்கு பாஜ.வில் இருந்து அதிகம் பேர் வந்து தனது கட்சியில் சேர்வதாக மறைமுகமாக கூறும் வகையிலேயே, அகிலேஷ் இப்படி கிண்டலாக கூறியுள்ளார்.

Related Stories: