தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

சென்னை : ஆவடி அடுத்த பூச்சி அத்திப்பட்டு, கள்ளிகுப்பம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அருண் (30), லாரி டிரைவர். இவரது மனைவி நிஷா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தையான ருத்ரா, கடந்த 12ம் தேதி வீட்டு முன்பு விளையாடியபோது, அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து, மூழ்கியது.  குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தது.

Related Stories: