துபாய்: துபாய் சர்வேத விமானநிலையத்தில் இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்களும் ஒரே ஓடு பாதையில் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் விமனநிலையத்திலிருந்து கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 2 விமானங்கள் ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு- விற்கு புறப்பட தயாராக இருந்துள்ளன. 5 நிமிட இடைவெளியில் புறப்படவிருந்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை ஒதுக்கப்பட்டது. புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் 2 விமானங்களும் செல்ல இருந்ததை விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து ஹைத்ராபாத் விமானத்தை நிறுத்துமாறு விமான ஓட்டிக்கு அறிவுறுத்தினார்.