சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 35,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, ஒமிக்ரான் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு பிரச்சினையும் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,487க்கும், சவரன் ரூ.35,896க்கும் விற்பனை செய்யப்படுகிறது.