விமான விபத்தில் இறந்த 13 பேரில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது: இந்திய ராணுவம்

டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம்  காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வீரர்களின் உடல்கள் அடையாளம் காண தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

Related Stories: