விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் முடிவுக்கு வருகிறது. சிங்கு எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி - சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகள் கூடாரங்களை அகற்றி வருகின்றனர். மத்திய அரசு வழங்கிய திருத்தி அமைக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உறுதியை விவசாயிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் கூடாரங்கள் அகற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: