புகையால் ஏற்படும் மாசு குறைக்க 3 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த நாகை கலெக்டர்

நாகை: நாகை  மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக அரசு அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை அலுவலகங்களுக்கு சைக்கிளில் வர வேண்டும் என்று கடந்த 5ம் தேதி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, கலெக்டர் அருண்தம்புராஜ், முதல் முறையாக நேற்று முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு 3 கி.மீ தூரம் சைக்கிளில் வந்தார். அவரது பாதுகாப்பு அலுவலர், உதவியாளரும்  சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.

Related Stories: