சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்தது. இதை பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்காமல் தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளது.