சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,01,523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 703 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 7,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 728 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,88,142 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்தனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல் கோவையில்-117, செங்கல்பட்டு- 56, ஈரோடு-58, திருப்பூர்-50 பேருக்கு தொற்று பதிவாகியது.