சொல்லிட்டாங்க...

* 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை அழித்த மோடி, தனது பேரழிவு பயணத்தை தொடர்கிறார். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

* 7 தமிழர்கள் விடுதலையில் முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இனியும் ஆளுநர் தாமதம் செய்வது நியாயமல்ல. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரசை புறக்கணித்தது முதுகில் குத்தும் செயலாகும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* நாகாலாந்து பிரச்னை ரொம்ப துரதிஷ்டவசமானது. சில சமயங்களில் எதிரிகள் நம் நாட்டை சேர்ந்தவர்களை போன்றே வருவார்கள். - முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

Related Stories: