உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை க.சுந்தர் எம்ஏல்ஏ திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர், திணையாம்பூண்டி, சித்தனக்காவூர் ஆகிய கிராமங்களில், ஊராட்சி மன்ற கட்டிடங்கள், பென்னலூர், கட்டியாம்பந்தல், மலையங்குளம், பழவேரி, பினாயூர், சித்தனக்காவூர் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், ஆதம்பாக்கம் மற்றும் மதூர் கிராமங்களில் பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 57 லட்சத்தில் கட்டப்பட்டன. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது.