சென்னை: ஆவடியில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகள், மாநகர பஸ், ரயில் மற்றும் சைக்கிள்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். சில மாணவிகள், தங்கள் பகுதிக்கு செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மாணவிகள் திடீரென இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். அப்போது ஒரு மாணவியின் தலைமுடியை பிடித்து கீழே இழுத்துப்போட்டு சில மாணவிகள் அவரை கால்களால் மிதித்தனர்.