புதுடெல்லி: தென் ஆப்ரிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் ரகானேவுக்கு பதிலாக துணை கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரோகித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராத் கோஹ்லி தலைமையிலான அணியில் மொத்தம் 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரகானேவிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மா ஏற்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.