சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: நாகலாந்து எம்பி வலியுறுத்தல்

மாநிலங்களவையில் நாகலாந்து எம்பி கேஜி கென்யே பேசுகையில், ‘நாகலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தால் கடந்த 63 ஆண்டுகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டமானது வடகிழக்கு பிராந்திய மக்களை கொடுமை செய்ததை தவிர இந்த நாட்டுக்காக வேறுஎதையும் செய்யவில்லை. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமை பாட்டின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் ராணுவ வீரர்கள் சிறப்பு அதிகார சட்டத்தை தவறாக தான் பயன்படுத்துகின்றனர். 14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலமாக இந்த நாட்டில் அறிவில் சிறந்தவர்கள், தலைவர்கள் மற்றும் சரியான சிந்தனை கொண்ட குடிமக்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டுவிட்டது’ என்றார்.

Related Stories: