சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு குறித்த காலத்தில் தேர்வு நடக்கும். முன்னதாக மார்ச் மாதம் திருப்பத் தேர்வுகள் நடக்கும் என்பதால் மாணவர்கள் அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கிய பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதம் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.