நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது.: ஐகோர்ட்டில் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீர்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நீர்வள ஆதாரங்களை பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான  நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றி வருவகிறது. 2020ம் ஆண்டே இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின் இணைப்பும் தரக்கூடாது, ஊரக வளர்ச்சித்துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது.

 மேலும் நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறை உருவாக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதில்  மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள், குளங்கள் உள்ளூர் விவசாயிகள், இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளது.  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து  அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.  நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்ததுபோல் பேணவும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும்.

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு உரிய தரத்துடன் பாதுகாக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைக்காலங்களில் திடீர் என திறந்துவிடப்பட்டு வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் நான்குமுறை பெய்த கனமழையால்  ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்ப்பணிப்பபோடு செயல்பட்டுவருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: