மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கத்துக்கு வந்த விமானத்தில் கோட், உள்ளாடைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து 2 பயணிகளை கைது செய்தனர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சென்னையை சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகபேசியதால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.