கோட், உள்ளாடையில் மறைத்து கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்: விமான நிலையத்தில் 2 பயணிகள் கைது

மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கத்துக்கு வந்த விமானத்தில் கோட், உள்ளாடைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து 2 பயணிகளை கைது செய்தனர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சென்னையை சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகபேசியதால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது ஒரு பயணி தான் அணிந்திருந்த கோட்டில் 8 தங்க பட்டன்களை வைத்து தைத்திருந்தார். மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பார்சல்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து தங்க பட்டன், தங்கப்பசை என மொத்த 700 கிராமம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம். இதையடுத்து பயணிகள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: