சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இதுவரை 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த பிபின் ராவத் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.