அந்த பகுதி மாரியம்மன் கோவில் உண்டியலையும் அவர்கள் உடைத்திருக்கிறார்கள். ஒரே இரவில் நடந்த இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஆறு தனிப்படையை அமைத்து போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்த கவிதாஸ் என்பவர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தனியாக உள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யும் குரூரமனநிலை கொண்டவர் கவிதாஸ் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.