வால்பாறை : வால்பாறை ஐய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை நகர பகுதியில் சமீபகாலமாக காட்டுமாடு, யானைகள், கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு நடமாட்டம் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி யானைகள் உணவு தேடி ரேஷன் கடையும், வீடுகளையும் இடித்து சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஐயர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து 40வது கொண்டை ஊசி வளைவு பகுதியை நோக்கி 3 கரடிகள் நடந்து சென்றுள்ளது.