பஞ்சப்பள்ளியில் இருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்-கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

பாலக்கோடு : பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கிவரும் அரசு பஸ்சில் காலை மாலை நேரங்களில், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் 5ம் எண் பஸ்சில் பாலக்கோடு வந்து செல்கின்றனர்.வாழைத்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிரம்பி வழிவதால், அங்குள்ள மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்து வருகின்றனர்.

காலை 9.15மணிக்கு பஸ்சை தவற விட்டால், 10 மணி வரை பஸ்சுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லுரி மாணவர்கள் பஸட படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: