பாலக்கோடு : பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கிவரும் அரசு பஸ்சில் காலை மாலை நேரங்களில், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் 5ம் எண் பஸ்சில் பாலக்கோடு வந்து செல்கின்றனர்.வாழைத்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிரம்பி வழிவதால், அங்குள்ள மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்து வருகின்றனர்.