தமிழகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்கும் திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!!

சென்னை : தமிழகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ (whats new) பகுதியில் Ex-Gratia for Covid-19 என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: