சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3வது ரயில் பாதையில் பொங்கல் முதல் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் முடிவு பொங்கல் பரிசாக வந்துள்ளதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது சென்னை மற்றும் புறநகர் ரயில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதன்படி 256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாம்பரம் - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வந்தன.