மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட பிரிவுக்கு தலைவராக இருப்பவர் மிரினாலினி மண்டல் மாய்டி. இவர் பழைய மால்டா பஞ்சாயத்து சமிதியின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில், தனது அலுவலகத்தில் ஒரு கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜ மாவட்ட தலைவர் கோபிந்தா சந்திரா மண்டல் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், வெடிப்பொருட்கள் கிடங்காக மாற்றி வருகிறது. மிரினாலினியை சோதனை செய்தால் அவரிடம் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் போலீசாருக்கு கிடைக்கும்.