சென்னை: புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர், தனது மகள் மைதிலி (22) காணாமல் போனதாக, கடந்த 4ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், மைதிலி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மைதிலி மற்றும் அவரது காதலன் பிரேம்குமாரை நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், மைதிலிக்கு ஏற்கனவே கோகுல் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதும், இதை மறைத்து குமாரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரேம்குமாரின் உறவினர்களை காவல் நிலையம் வரவழைத்து தகவலை தெரிவித்தனர்.