ஆந்திர வெள்ளம் நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி நிதி

ஐதராபாத்: வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆந்திர மாநிலத்தில் குறிப்பாக திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, ஆந்திர முதல மைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

Related Stories: