திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் கோளியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (23). பிரபல ரவுடி. அவர் மீது கோவளம், விழிஞ்ஞம், பூஜப்புரா, வலியதுரை ஆகிய காவல் நிலையங்களில் 16க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் பிரகாஷ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தி சென்றதாக விழிஞ்ஞம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.