பண்ருட்டி: பண்ருட்டி பிடிஎஸ் மணி நகரில் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மக்கள்தொகை பெருக்கத்தாலும், இட நெருக்கடியாலும் பொதுமக்கள் வெளியில் சென்று இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு பண்ருட்டி நகராட்சியின் மூலம் அவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் பொது சுகாதார வளாக மையம் அமைத்து கொடுத்தது.
அது சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் மன நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது அதிகாரிகள் அவைகளை கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்த சுகாதார வளாகம் பாழடைந்து, முட்புதர்கள் மண்டி போனது.