திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா 2வது அலைக்கு பின்னர் பெரும்பாலான மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்துவிட்டது. ஆனால் கேரளாவில் நோய் பரவல் இன்னும் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக 5000க்கு மேல் உள்ளது. தொற்று சதவீதம் சராசரியாக 9க்கு மேல் உள்ளது. மரண எண்ணிக்கையும் குறையவில்லை. கடந்த 3 மாதங்களில் இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா ேநாயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 98416 ஆக இருந்தது. இதில் 40730 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.