மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு ஏர்இந்தியா விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவின் சட்டதிட்ட விதிகளின்படிதான், கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற ஆரம்பித்துள்ளது.