சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: இந்தியாவில் அனைத்து தொடர்வண்டிகளும் கொரோனா பரவலுக்கு முந்தைய கால அட்டவணைப்படி இயங்கத் தொடங்கி விட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.