அரசு பேருந்தில் பயணசீட்டு இல்லாமல் பயணித்ததால் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்ட நடத்துனரை தாக்கிய காவலர்

சென்னை: அரசு பேருந்தில் பயணசீட்டு இல்லாமல் பயணித்ததால் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்ட நடத்துனரை காவலர் தாக்கிய சம்பவம் செங்கல்பட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து மகாபலிபுரம் நோக்கி செல்லும் தடம் எண் 508-ல் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறிய ஹரிதாஸ் என்ற காவலரிடமும் பயணசீட்டு வாங்கும்படி நடத்துனர் முருகேசன் கேட்டுள்ளார். அதற்க்கு ஹரிதாஸ் தான் ஒரு காவலர் என கூறவே அடையாள அட்டையை காண்பிக்குமாறு நடத்துனர் கேட்டுள்ளார்.

அதற்க்கு காவலர் மறுப்பு தெரிவித்ததால் வரை பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி நடத்துனர் கூறியதால் அவரை காவலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்நிலையத்தில் முருகேசன் புகார் அளித்ததும் சம்பவத்தை கேள்வி பட்ட நடத்துனர்கள், ஓட்டுனர்கள் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: