சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ரூ.10 நோட்டுகள் கீழே இருப்பதாக கவனத்தை திசை திருப்பி கருணாகர பாண்டியனிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி நடந்துள்ளது. வங்கியில் இருந்து சைக்கிளில் எடுத்து வந்த பணத்தை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.