டெல்லி: டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களது தொடர் போராட்டம் காரணமாக புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது. இதற்கான மசோதா, நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்பட்டு திரும்ப பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து எல்லையில் முகாமிட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வு குறித்து டெல்லி - பஞ்சாப் எல்லையான சிங்குவில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.