சென்னை : தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் எனவும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடைபெறும்.