மாஸ்கோ : ரஷ்யாவின் எந்த தாக்குதலையும் சமாளிப்போம் என்று உக்ரைன் ராணுவம் சூளுரைத்து இருப்பதால் 2 நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ‘நேட்டோ’ என அழைக்கப்படும், ‘வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ கடந்த 1949ம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் தொடங்கப்பட்டது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட உலகின் பலம் வாய்ந்த நாடுகள் இடம் பெற்றுள்ளன. நட்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளின் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அமைப்பில் தற்போது உக்ரைன் சேர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.