65ம் ஆண்டு நினைவு நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

சென்னை: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அம்பேத்கரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி பங்கேற்றனர்.சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தார். பாஜ எஸ்சி பிரிவு மேலிட பொறுப்பாளர் வெங்கடேசன் மவுரியா, மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டனர்.தமாகா தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், நிரவாகிகள் ராஜம் எம்.பி.நாதன், அசோகன், சைதை மனோகரன், ரமேஷ், ஆர்.எஸ்.முத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னையில் சமக தலைமை  அலுவலகத்தில் மாநில பொருளாளர் சுந்தரேசன் அம்பேத்கர் படத்திற்கு மாலை  அணிவித்தார். சென்னை மண்டல அமைப்புச் செயலாளர்  மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.தொழில்நுட்ப கல்வித்துறை அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலசங்கம் சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில தலைவர் அப்துல் வகாப், எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச்சங்க மாநில தலைவர் டி.மணிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.

சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார். மாநிலக்குழு உறுப்பினர் அ.பாக்கியம், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் கலந்து கொண்டனர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவர் முன்னாள் நீதிபதி சிவகுமார் மாலை அணிவித்தார்.

Related Stories: