ஒருநாள் இரவு மட்டும் கேத்ரினா தங்கும் அறைக்கு ரூ.7 லட்சம் வாடகை

ஜெய்ப்பூர்: பாலிவுட் நடிகை கேத்ரினா கைப், நடிகர் விக்கி கவுஷல் திருமணம் வரும் 9ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இங்குள்ள பிரமாண்ட ரிசார்ட் ஒன்றில் மணமக்கள் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. விக்கி கவுஷல் ராஜா மன்சிங் அறையிலும், கேத்ரினா ராணி பத்மாவதி அறையிலும் தங்குகிறார்களாம். அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் வாடகை தலா ரூ. 7 லட்சம். இந்த ரிசார்ட்டில்தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் வேறொரு ஓட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள். கேத்ரினாவின் முன்னாள் காதலர்களான சல்மான் கான், ரன்பீர் கபூர் ஆகியோருக்கு திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.

Related Stories: