ஸ்ரீநகர்: ஷோபியன் பகுதியில் 2 தீவிரவாதிகளை சுற்றிவளைத்து கைது செய்த பாதுகாப்பு படையினர், அவர்களிடம் இருந்து சீன துப்பாக்கி, கையெறி குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் ரம்பி ஆரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஷாஹித் அகமது என்பவன், தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பதிலடி நடத்தி இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.