சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்: ஸ்டேஷன் மாஸ்டர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஓட்டகோவில் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிபவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகர்நாக்(37). இவர், தற்போது அரியலூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாகர்நாக்கை நேற்று கைது செய்தனர்.

Related Stories: