அண்ணாநகர்: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, எல்.கே.சுதீஷ் உள்பட 67 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.