பெங்களூர் :பெங்களூர் மாநகரில் தலைமை செயலக கட்டிடமான விதான சவுதாவில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அசோக் நகர். அண்மையில் பெங்களூருவில் பெய்த கனமழையை அடுத்து இப்பள்ளியை இழுத்து மூடிய கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களை தற்காலிகமாக அருகில் இருக்கும் வேறு பள்ளியில் அமரவைத்து பாடம் எடுத்து வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான இங்கு 1930 ஆம் ஆண்டு தமிழ் ஆரம்ப பள்ளி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் சேர்த்து வருவதால் பழமையான இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இப்பள்ளியில் தற்போது 10 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் படித்து வருகிறார்கள் மற்றும் ஒரு ஆசிரியை உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்டிடத்தை அரசு கவனிக்காத காரணத்தினால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் தவறிவிட்ட காரணத்தினால் தான் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.