கென்யா: கென்யா நாட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது பேருந்து ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர். கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் பேருந்தில் சென்றுள்ளனர்.