மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி, அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கும் நிலையில், பரிசல் சவாரிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.