ஆரணி: ஆரணி அருகே மருத்துவமனைக்கு சென்ற பெண் ஊழியர் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக 2 குழந்தைகளின் தந்தை மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். திருமணமாகாத இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்த அவர், கடந்த 24ம்தேதி மருத்துவமனைக்கு சென்று சம்பளம் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்னை மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் ேதடினர். எங்கும் கிடைக்கவில்லை.