திருவனந்தபுரம்: மலையாள நடிகர், நடிகைகளுக்காக ‘அம்மா’ என்ற பெயரில் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கடந்த 2018ல் நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், வரும் 19ம் தேதி மீண்டும் சங்க தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் ெதாடங்கியது. தலைவர் பதவிக்கு மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு மனு தாக்கல் செய்தனர். மனுக்களை வாபஸ் பெறும் தேதி முடிந்த நிலையில், நேற்று முன் தினம் மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.